எரேமியா 25
15 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற
ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள்
அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,
16 இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து
வாங்கி, அவர்கள் எல்லாருக்கும் அதிலே
குடிக்கக்கொடு என்றார்.
கர்த்தருடைய கையிலிருந்து மதுபான பாத்திரத்தை தீர்க்கதரிசியாகிய எரேமியா வாங்கி அதிலுள்ள மதுவை மக்களுக்கும், தேசத்தின் ராஜாக்களுக்கும் குடிக்க கொடுக்கிறார்.
17 அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து
வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா
ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.
18 எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும், அதின் ராஜாக்களுக்கும், அதின்
பிரபுக்களுக்கும், அவர்களை
இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும்
சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன்.
19 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும்,
அவன் ஊழியக்காரருக்கும், அவன்
பிரபுக்களுக்கும், அவனுடைய எல்லா
ஜனத்துக்கும்,
20 கலந்து குடியிருக்கிற அனைவருக்கும்,
ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும், பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும், காசாவுக்கும், எக்ரோனுக்கும், அஸ்தோத்தில்
மீதியானவர்களுக்கும்,
21 ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் புத்திரருக்கும்,
22 தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
23 தேதானுக்கும், தேமாவுக்கும், பூசுக்கும், கடையாந்தரங்களிலுள்ள
அனைவருக்கும்,
24 அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும்,
வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா
ராஜாக்களுக்கும்,
25 சிம்ரியினுடைய எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமினுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
மேதியாவினுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
26 வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின் மீதிலுள்ள சகல தேசத்து ராஜ்யங்களுக்கும்
குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற
ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.
27 நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள்
அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய
சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.
28 அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில்
வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி:
நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று
சொல்லு.
தேசத்தின் ராஜாக்களோ அல்லது மக்களோ மது குடிக்க மாட்டேன் என்று சொன்னால் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் "நீங்கள் குடித்தே தீர வேண்டும்" என்று சொல்லு.
29 இதோ, தீங்கைக் கட்டளையிட
நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ?
நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின்
எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார்.
30 ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம்
தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி:
கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த
வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி,
தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக்
குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
31 ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர்
சொல்லுகிறார்.
32 இதோ, ஜாதிஜாதிக்குத்
தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல்
எழும்பும்.
33 அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும்
கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள்
புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம் பண்ணப்படாமலும் பூமியின்மேல்
எருவாவார்கள்.
34 மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு
கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும்
சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான
பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.
35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும்,
மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும்
இடமிராது.
36 தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள்
கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள்
அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.
37 அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே
சங்காரமாயின.
38 அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப் போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும்,
அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
நீங்கள் புரிந்து கொண்ட விதம் தவறு பிரதர். நீங்கள் கூறியுள்ள வசனங்கள் எபிரேய இலக்கிய நடையில் வேறு அர்த்தத்தைக் குறிக்கிறது.
ReplyDeleteஇவ்வசனத்தில் மதுபானத்தை குடிக்கச் சொல்லி ஜனங்களை கர்த்தர் வற்புறுத்தவில்லை. அதனை மேலோட்டமாக படித்தால் இவ்வாறு தவறாக புரிந்து கொள்ள நேரிடும். இங்கு உருவகமாக எரேமியா தீர்க்கதரிசி ஒரு தீர்க்கதரிசனத்தை சொல்லி இருக்கிறார்.
அதாவது இஸ்ரவேல் ஜனங்கள் பலவிதமான பாவச் செயல்களில் ஈடுபட்டு கடவுளுக்குப் பொல்லாப்பானதை செய்து வந்தார்கள். அவர்களது தீய செயல்களை விட்டு விலகச் சொல்லி அவர்களிடம் கர்த்தர் தீர்க்கதரிசிகளை அனுப்பிக் கொண்டே இருந்தார். எத்தனை தேவ மனிதர்கள் வந்தாலும் நற்புத்திகளைச் சொன்னாலும் அவர்கள் தங்கள் தீய செயல்களை விட்டு திரும்பவில்லை. இறுதியாக அவர்களை தண்டித்து உணர்த்த கர்த்தர் முடிவு செய்தார். எனவே பாபிலோன் நாட்டு அரசனான நேபுகாத்நேச்சாரை இஸ்ரவேலின் மேல் படையெடுத்து வரும் படி செய்தார். அந்த அரசன் வந்து இஸ்ரவேலை பாழாக்கி, சீரழித்து அதன் ஜனங்களை தன் நாட்டிற்கு அடிமையாகக் கொண்டு சென்றான்.
இந்த வசனத்தில் கர்த்தர் கையில் உள்ள மதுபான பாத்திரமாக கூறப்படுவது பாபிலோன் நாடு. பாபிலோன் நாட்டின் அரசன் மூலம் கர்த்தர் இஸ்ரவேலுக்கு உண்டுபண்ண போகிற தீமை தான் அந்த பாத்திரத்தில் உள்ள மது. மதுவை குடிக்கும் போது எப்படி ஒருவன் வெறித்து போவானோ அது போல இந்த தீமை நேரிடும் போது ஜனங்கள் ஒருவரை ஒருவர் வெறியோடு தாக்கிக் கொள்வார்கள்.
இதனை குறித்தே என் கோபத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என ஜனங்களிடம் சொல்லுமாறு கர்த்தர் எரேமியாவிடம் சொல்கிறார். எனவே எரேமியா இஸ்ரவேல் மேல் கடவுள் கொண்டு வரப்போகும் ஆபத்தை கூறுகிறார். அப்போது ஜனங்கள் அந்த கோபத்தை நாங்கள் பெற்றுக் கொள்ள மாட்டோம் என எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை மறுக்கின்றனர். அதனை தான் "மது குடிக்க மாட்டோம்" என ஜனங்கள் மறுப்பதாக எரேமியா எழுதியிருக்கிறார். ஆனால் கர்த்தர், கோபாக்கினையை அவர்கள் அடைந்தே தீரவேண்டும் என சொல்லுமாறு எரேமியாவிடம் சொல்லுகிறார். அதனைத் தான் எரேமியா "குடித்தே தீர வேண்டும்" என கர்த்தர் சொல்வதாக சொல்கிறார்.
எரேமியா 51:7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.